திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஓர் இலக்கிய மாலை

திங்கள், பிப்ரவரி 27, 2012

               

                   நேற்று டெல்லி தமிழ்ச் சங்கத்தில் திரு.எஸ்.
ராமகிருஷ்ணன் அவர்களின் உரை நிகழ்ச்சி இருந்தது. பொதுவாக
இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ்ச்சங்கத்தில் மாலை 6 அல்லது
6 .30 மணிக்குத்தான் துவங்கும். அதனால் நானும் வழக்கம்
போல 6 .30 மணிக்குக் கிளம்பி போனால், நான் போய் சேர்ந்த 10
நிமிடங்களுக்கெல்லாம் எழுத்தாளர் பேசி முடித்துவிட்டார்.
அங்கு கேட்டால், நிகழ்ச்சி 5 மணிக்கே ஆரம்பித்து விட்டதாகவும்,
6 .30 மணிக்குமேல் திரைப்படம் ஒளிபரப்பப்படப் போகிறது
என்றும் சொன்னார்கள். கிளம்பி வந்து கேட்க முடியாமல்
போய்விட்டதே என்று மிகவும் கஷ்டமாகி விட்டது. இதில்
சந்தோசம் என்னவென்றால் சக பதிவர்களான திருமதி.
முத்துலெட்சுமியையும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களையும்
சந்திக்க முடிந்தது.


                  பல நாட்களாக சந்திக்க வேண்டுமென திட்டம் போட்டு,
 கடைசியில் சந்திக்க முடியாமல் போய்விட்டது. நேற்றுதான் அது சாத்தியமானது. அதுவும் நேற்று, பதிவர்கள் அனைவரும்
டெல்லியில் நடந்துகொண்டிருக்கும் உலகப் புத்தகக் கண்காட்சியில் சந்திக்கலாமா என்று திரு.வெங்கட் அவர்கள் கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கும் என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது.
கடைசியில் மாலையில் தமிழ்ச்சங்கத்தில் தான் அவர்களை
சந்திக்க முடிந்தது. அந்தமட்டில் சந்தோஷம். எழுத்தாளரின்
பேச்சைத்தான் முழுமையாகக் கேட்க முடியாமல் போய்விட்டது.
அவர் பேசி முடித்தபின் அவருடன் சேர்ந்து புகைப்படம்
எடுத்துக்கொண்டோம்.

                நேற்றைய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்
உரையை திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது வலைப்பூவில்
விரிவாக எழுதியுள்ளார்.


யானை டாக்டர்- படித்ததில் பிடித்தது

வியாழன், பிப்ரவரி 23, 2012


                      சென்ற வாரம் டெல்லி தமிழ்ச் சங்கத்தில்
'காவல் கோட்டம்' திரு.சு.வெங்கடேசன் அவர்களின்
பாராட்டுவிழாவுக்குச் சென்றிருந்த போது திருமதி.சுசீலாம்மா
இந்தப் புத்தகத்தை எல்லாருக்கும் கொடுத்தார்.


                    திரு.ஜெயமோகன் எழுதியுள்ள யானை டாக்டர் என்ற
இந்த நாவலை, காட்டைப் பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும்
மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக இலவசமாக கொடுக்கிறார்கள்.

                  இந்த நாவலில் யானை டாக்டர் என்றழைக்கப்பட்ட
டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர் வன
விலங்குகளுக்கு மருத்துவம் செய்த விதமே வித்தியாசமானது.
அதிலும் குறிப்பாக யானைகளுக்காக இவர் தனது வாழ்நாளை
அர்ப்பணித்துக் கொண்டவர்.
             


                டாக்டர் கே என்றழைக்கப்பட்ட இவர்தான் உலகிலேயே
அதிக யானைகளுக்கு சவப் பரிசோதனையும், அதிகமான
யானைகளுக்கு பிரசவமும் பார்த்துள்ளார்.

               இந்த நாவலில் வலியைப் பற்றியும் புழுவைப் பற்றியும்
அவர் சொல்லியிருக்கும் விளக்கம் அருமை. மக்களால் வனமும் வனவிலங்குகளும் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் இந்த நாவலில்
விவரமாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக இவர் எடுத்த முயற்சிகள்
மிக அதிகம்.

               பலவருடங்களாக பத்மஸ்ரீ விருதுக்கு இவரது பெயர்
பரிந்துரைக்கப்பட்டும் கடைசி வரை இவருக்குக் கிடைக்காதது,
மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

               2000 ஆம் ஆண்டு, வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும்
மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருது டாக்டர்
கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இலக்கிய ஆர்வமும்
உள்ள இவர் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தனது
73 ஆம் வயதில் மரணமடைந்தார்.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் காவல் கோட்டம் திரு.சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

                 கடந்த புதன் கிழமை 15.02.2012 அன்று டெல்லி
தமிழ்ச் சங்கத்தில் காவல்கோட்டம் நாவலை எழுதி, சாகித்ய
அகாடமி விருது பெற்றுள்ள திரு. சு. வெங்கடேசன்
அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழா,
விருதைப் பெற்றதற்கு மறுநாளே சு.வெங்கடேசன் அவர்களுக்கு
 முதல் பாராட்டு விழாவாக அமைந்தது.



               
                இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு. டி.கே.
 ரங்கராஜன், எம்.பி., திரு. விஜய் ராஜ்மோகன், திரு முத்து
இருளன், இலங்கை எழுத்தாளர் திருமதி. சுமதி மற்றும்
திருமதி. எம். ஏ. சுசீலா ஆகியோர் வந்திருந்தனர்.

               இதில் திரு முத்து இருளன், திரு விஜய் ராஜ்மோகன்
 மற்றும் திருமதி எம்.ஏ. சுசீலாம்மா ஆகியோர் நாவலைப்
 பற்றியும் அதன் கதாப் பாத்திரங்கள் பற்றியும் பேசினர்.
அதிலும் சுசீலாம்மா நாவலின் பெண் கதாப்பாத்திரங்கள் பற்றி
 மிகவும் சிலாகித்து பேசினார்.
              திரு டி.கே.ரங்கராஜன் அவர்கள் இந்த சாகித்ய அகாடமி
 விருதைப் போல தமிழிலும் தனியாக ஒரு சாகித்ய அகாடமி
விருது வழங்கி எழுத்தாளர்களை கௌரவிக்க வேண்டும் என்று
பேசினார். திருமதி.சுமதி அவர்கள் தான் இந்த நாவலைப்
படிக்கவில்லை, அதனால் தன்னைப் பற்றிக் கூறுவதாக
கூறிவிட்டு, தான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றிக்
கூறினார். தேயிலைத்தோட்டத்தில் கொத்தடிமைகளாக
பணிபுரிபவர்களைப் பற்றிய படம். இதற்கும் நாவலுக்கும்
சம்பந்தம் உண்டு என்று கூறினார்.
              இறுதியாக ஆசிரியர் சு. வெங்கடேசன் ஏற்புரை
வழங்கினார். அதில் தான் பத்து ஆண்டுகள் இந்த நாவலை
எழுதுவதற்குப் பட்ட கஷ்டங்களைக் கூறினார். 1898 இல்
பதிவான ஆவணம் ஒன்றே அவர் இந்த நாவலை எழுத
அடிப்படைக் காரணம் என்று கூறினார். மேலும் இந்த
நூலுக்கும் இந்த விருதுக்கும் எழுந்து கொண்டிருக்கும்
சர்ச்சைகளைப் பற்றியும் மிகுந்த மனவருத்தத்துடன்
பேசினார்.


               டாக்டர். சுந்தர்ராஜன் அவர்களின் வரவேற்புரை


              திரு.டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்களுக்கு பாராட்டு





        தில்லி தமிழ்ச்சங்கம் பொதுச் செயலாளர் திரு முகுந்தன்
                                     அவர்களின் வாழ்த்துரை


              திரு.முத்து இருளன் அவர்களின் வாழ்த்துரை


                திருமதி.எம்.ஏ.சுசீலா அம்மாவின் வாழ்த்துரை


காவல் கோட்டம் திரு.சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு




                 திரு.சு.வெங்கடேசன் அவர்களின் ஏற்புரை

                       இவ்வாறு விழா முடிய இரவு 9 .30 ஆகிவிட்டது.
 பல நாட்கள் கழித்து இது போன்ற விழாவில் கலந்து
கொண்டதால் மன நிறைவாகவே இருந்தது. மேலும் நமது சக
 பதிவர்களான திருமதி எம். ஏ.சுசீலா அம்மாவையும்,
திருமதி. முத்துலெட்சுமி (சிறு முயற்சி) அவர்களையும் சந்தித்து பேசியது
 மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இந்த விழாவைப் பற்றிய விவரங்களை சுசீலாம்மா தனது பதிவில் குறிப்பிட்டுளார்.
http://www.masusila.com/2012/02/2.html


விருதுக்கு நன்றி

வியாழன், பிப்ரவரி 16, 2012




                  நான் பதிவுகள் எழுதி கிட்டத்தட்ட மூன்று
 மாதங்களாகி விட்டது. என்னைத் திரும்பவும்
எழுதுவதற்கு ஊக்கமளிக்கும் விதமாக திருமதி.ஆதி
வெங்கட் அவர்கள் (கோவை2தில்லி) இந்த விருதினை
 எனக்கு அளித்துள்ளார். இது வலைப் பதிவர்களுக்கென
 வழங்கப்படும் ஜெர்மானிய விருதாம். இதை வழங்கி
என்னைக்  கௌரவித்ததற்கு திருமதி.ஆதி அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்.

 இந்த விருதினை மேலும் ஐந்து பேருக்கு பகிர்ந்து
அளிக்கும் படி கூறியுள்ளார். அதன் படி நானும் ஐந்து
பேருக்கு பகிர்ந்தளிக்கிறேன்.

1 . திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் (சும்மா)

2 . திருமதி. லக்ஷ்மி அவர்கள் (தமிழ்விரும்பி)

3 . திருமதி. ஸாதிகா அவர்கள்
 (எல்லாப்புகழும் இறைவனுக்கே)

4. திரு. பழனி.கந்தசாமி அவர்கள் (சாமியின் மனஅலைகள்)

5 .திரு. ரத்னவேல் நடராஜன் அவர்கள்
(ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்)
Related Posts with Thumbnails