பாலை அருந்துவது ஆரோக்கியமா?

திங்கள், அக்டோபர் 03, 2011


                 இது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

             பால் பற்றிய தவறான கருத்து நம்மில் அனைவருக்கும்
இருக்கிறது. பெரியவர்கள் பால் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது
சிறிய குழந்தைகளுக்குத்தான். வெள்ளைப் பொருட்கள் உடலுக்கு
நல்லதல்ல. அதில் பாலும் ஒன்று என்றும், இதுபோல் நிறைய
செய்திகளை நாம் படிக்கிறோம், கேட்கிறோம். இப்போது பால்
நமக்கு நல்லதா? கெட்டதா?  என்று அறியலாம்.




              


                பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு ஆறுமாதம் வரை கண்டிப்பாக
தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். அதன்பிறகு குழந்தைகளின்
6 மாதம் முதல் 100 வயது பெரியவர்கள் அனைவரும் பால்
அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற
பலவிதமான சத்துக்கள் உள்ளன. மற்ற பொருட்களில் இல்லாத
சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும்
500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக்
கொள்ளலாம்.
              6%,3%,1.5% கொழுப்பு உள்ள பால் கிடைப்பதால்
நமக்குத் தேவையான கொழுப்பு அளவின்படி நாம் எடுத்துக்
கொள்ள வேண்டும். பாலில் தண்ணீர் சேர்க்க கூடாது. பாலில்
70% தண்ணீர் இருப்பதால் பாலில் தண்ணீர் கண்டிப்பாக சேர்க்க
வேண்டாம். கொழுப்பு குறைக்க வேண்டும் என்றால், கொழுப்பு
குறைவாக உள்ள பாலை பயன்படுத்தவேண்டுமே தவிர
தண்ணீர் ஊற்றிக் காய்ச்சக் கூடாது. ஆவின் பால் ஒரு சிறந்த
பதப்படுத்தப்பட்ட பால் என்று சொல்லப்படுகின்றது. 3%
கொழுப்பு உள்ள ஆவின் பாலை நாம் எல்லோரும்
பயன்படுத்தினால் போதுமானது.

   பால் அருந்துவதால் வரும் நன்மைகள்:

   எலும்பு சக்திக்கு:
               பால் பொருட்கள் சுண்ணாம்புச் சத்தினைக்
கொடுக்கின்றன. இச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
எலும்பு வளர்ச்சி குழந்தை மற்றும் இளம் பருவத்தில் அதிக
முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இளம்பருவத்தினர் பால்
மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்வது மிக முக்கியமான
ஒன்று. கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பிட்ட அளவில் பால்
எடுக்கவேண்டும். ஏனெனில், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு
அது மிக முக்கியமான ஒன்று. ஆப்டிமைசிங் போன் மாஸ் எனவே
இளம் பருவத்தினருக்கு எலும்பு முறிவு வராமால் குறைக்கின்றது.
அதே போன்று மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக
500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

  பல்:
             பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள சுண்ணாம்பு சத்து
மற்றும் பிற சத்துக்கள் பற்களுக்கு நண்பன். அச்சத்துக்கள்
பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகமிக
முக்கியமானது. இவை தவிர இரத்தக் கொதிப்பு
கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய
நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும்
பால் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிய
வந்துள்ளது.

            பாலின் முக்கியத்துவம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம்.
பால் நம் தினசரி உணவில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.
பாலில் உள்ள சத்துக்கள், நன்மைகள் தெரிந்தபின் நாம், பால்
நமக்கு நல்லதல்ல என்று சொல்வது சரியா? அதிக அளவில்
கண்டிப்பாக எடுக்கக் கூடாது. சிலர் ஒரு லிட்டர் பாலை சுண்டக்
காய்ச்சி பயன்படுத்துவார்கள். முன்பே சொன்னது போல பாலை
சுண்டக் காய்ச்சி பயன்படுத்துவது தவறு. பாலை சூடு செய்து
அளவோடு எடுத்துக் கொள்வதுதான் சிறந்தமுறை ஆகும்.
பாலை குளிர்சாதனப் பெட்டியில் பல நாட்கள் வைத்து
நல்லதல்ல். அன்றைய தினப் பாலை அன்றைக்கே
பயன்படுத்துவது சிறந்தது. பால் வெகுவிரைவில் கெட்டுப்
போகக்கூடிய ஒரு உணவு. ஆகையால், பாலை அதிக நாட்கள்
குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பது நல்லதல்ல.
இவ்வாறு பாலை சரியான முறையில் பயன்படுத்தி உடம்பை
நல்லமுறையில் பாதுகாக்க, பால் ஒரு சிறந்த முழு உணவாக கருதப்படுகின்றது. எனவே, பாலை தினசரி உணவில் அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென விரும்புகிறோம்.

          நான் தெரிந்து கொண்டது போல நீங்களும் பாலைப் பற்றி
பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டீர்களா?


மருத்துவமனை அனுபவம்

திங்கள், செப்டம்பர் 26, 2011

                
 
               டெல்லியில் உள்ள மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளில் சப்தர்ஜ்ங் மருத்துவமனையும் ஒன்று. 10 நாட்களுக்கு முன்பு, எங்கள் பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கு அங்குதான் டெலிவரி ஆனது. அவரைப் பார்க்க சென்ற போது, தனது மருத்துவமனை அனுபவத்தைக் கூறினார். கேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

               


                  அங்கு அட்மிட் ஆகும் நபர்களை, ஒரு பெட்டுக்கு இரண்டு பேர் என படுக்க வைப்பார்களாம். பிரசவ வலியிலும் ஒரு பெட்டில் இரண்டு பேர் படுத்துக் கொள்ள வேண்டுமாம். பிரசவம் சிசெரியனாக இருந்தால் மட்டும் ஒரு பெட்டுக்கு ஒருவராம்.

              அப்படி இவங்க அட்மிட் ஆன சமயத்தில், இவங்க பக்கத்து பெட்டில் ஒரு பெண்மணியும் அட்மிட் ஆனாங்களாம். சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு நார்மல் டெலிவரி ஆகிவிட, குழந்தையையும் தாயையும் ஒரு கட்டிலில் வந்து போட்டு விட்டு சென்றுவிட்டனராம். தாயும் குழந்தையும் அலுப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணிக்கு துணையாக ஒரு வயதான பாட்டி வந்திருந்ததாம். பாவம் அதற்கு கண் வேறு சரியாக தெரியாதாம்.

             அந்தப் பாட்டியும் கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நன்கு தூங்கி விட்டது போல. திடீரென்று அந்தப் பெண்மணியின் சத்தம் ஆஸ்பத்திரியே அதிரும் அளவு கேட்டதாம். என்னவென்று நர்ஸ்கள் எல்லாம் ஓடிப் போய்ப் பார்த்தால், குழந்தை இறந்து விட்டது. விசாரித்ததில், அந்தப் பெண்மணி தூக்கத்தில், குழந்தையின் முகத்தில், கையைப் போட்டு தூங்கி இருக்கிறாள். அந்த அழுத்தத்தில் குழந்தையின் மூக்கு நசுங்கி, மூச்சு முட்டி, குழந்தை இறந்திருக்கிறது.


                                       (இது அந்தக் குழந்தை அல்ல.)

              பாவம் இது அந்தப் பெண்மணியின் முதல் குழந்தையாம். அஜாக்கிரதையினால் பாவம் ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிர் போய்விட்டது. பக்கத்து வீட்டுப் பெண்மணி இதைச் சொன்னதில் இருந்து எனக்கு மனதே சரியில்லை. அன்று இரவெல்லாம் இதே ஞாபகமாகவே இருந்தது. 

இடைவெளி

வியாழன், செப்டம்பர் 22, 2011

              

           பிளாக்கில் கடைசியாக எழுதி,கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. சில அலுவல்கள் காரணமாக எழுத முடியவில்லை. இதனால் வலைப் பக்கங்களில் பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை. இந்த சிறு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எழுத வந்துள்ளேன் உங்களது ஆதரவுடன் .
Related Posts with Thumbnails