தேவதை இதழில் எனது பயணக் கட்டுரை ...

வியாழன், ஏப்ரல் 21, 2011


                         கடந்த ஏப்ரல் 1 - 15   "தேவதை"  இதழில்,
சுற்றுலா தொடர்பானக் கட்டுரையில், நாகர்கோவிலைப்
பற்றிய எனது பயணக்கட்டுரையும் வெளிவந்துள்ளது.
அதை தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும்,
வெளியிட்ட தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.

காந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தகத்தைப் பற்றி...

திங்கள், ஏப்ரல் 18, 2011

காந்தளூர்  வசந்தகுமாரன் கதை - சுஜாதா
உயிர்மை பதிப்பகம் வெளியீடு : 173 
விலை - ரூ.130 /-
சரித்திர நாவல்.
முதல் பதிப்பு : டிசம்பர் 1995
இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2008 

  
                 இந்தக் கதையை பெரும்பாலும் எல்லாரும் 
படித்திருப்பார்கள். எனக்கு இப்பொழுதுதான் படிக்க 
சந்தர்ப்பம் கிடைத்தது. சரித்திர நாவல்கள் எனில் எனக்குத்
தனி விருப்பம்தான். கதைகளில் வரும் சரித்திரக் காட்சிகளை 
கற்பனை செய்துகொண்டே படிப்பது மிகவும் பிடிக்கும் . அந்த 
வகையில் இந்தக் கதையும் கற்பனை செய்து படிப்பதற்கு
அருமையான தீனிதான்.

              ராஜராஜ  சோழன் வாழ்ந்த காலத்தில்  நடக்கும் கதை 
இது. சோழ நாட்டு வளங்களை,  நேரில் பார்ப்பது போல,
வர்ணனை செய்திருக்கிறார் திரு.சுஜாதா அவர்கள். இந்த 
நாவல் திரு. சுஜாதா அவர்களின் இரண்டாவது சரித்திர 
நாவலாகும். இந்த நாவலை பெரும்பாலும் இலக்கணத்
தமிழில்  எழுதியுள்ளார். இதைக் கதையின் கதாநாயகனான 
வசந்தகுமாரன், யாப்பிலக்கணத்தில் பேசுவதிலிருந்து 
அறியலாம். வசந்தகுமாரனின் துடுக்குத்தனமும்,
வீரமும் நாம் நேரில் காண்பது போலவே உள்ளது. 
சரித்திர  நாவல்களைப் படிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கு 
கண்டிப்பாக இந்த நாவலும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.


 

 
 

'சுருச்சி' (SURUCHI)

வியாழன், ஏப்ரல் 14, 2011


அனைவருக்கும் இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள் !!!

                என் கணவரது நண்பர், நீண்ட நாட்களாக ஒரு
ரெஸ்ட்டாரன்ட் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அது
குஜராத்தி மற்றும் ராஜஸ்தான் உணவுகளுக்கான புகழ்பெற்ற
ரெஸ்ட்டாரன்ட் என்றும் சாப்பாடு அவ்வளவு அருமையாக
இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

              போன வாரம்தான் அந்த ரெஸ்ட்டாரண்டிற்கு
போவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. டெல்லி-கரோல்பாக்
ஏரியாவில் இருக்கும் அந்த ரெஸ்ட்டாரன்ட்டின் பெயர்  'சுருச்சி'
(SURUCHI). போர்டிலேயே 'Rajasthani and Gujarathi Restaurant' 
 எனப் போட்டிருந்தது.  இது ஒரு வெஜிடேரியன்
ரெஸ்ட்டாரன்ட். மெனு கார்டிலேயே பஞ்சாபி தாலி
(இங்கு சாப்பாட்டிற்கு  தாலி என்று சொல்கிறார்கள்), குஜராத்தி
தாலி , ராஜஸ்தானி  தாலி , சவுத் இந்தியன்  தாலி என நான்கு
வகைதான் இருக்கிறது. ஆனால் எல்லாமே அன்லிமிடெட். இந்த ரெஸ்ட்டாரன்ட்டுடைய லோகோ ( EAT LIKE A KING )விற்கு 
ஏற்ப சாப்பிட்டு முடிக்க, முடிக்க வைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்.

                   குஜராத்தி  தாலி                         பஞ்சாபி  தாலி
                        

                  ராஜஸ்தானி  தாலி                  சவுத் இந்தியன்  தாலி

              நாம் எந்த சாப்பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் 
எனக் கேட்டுக் கொண்டு, அந்த ஊர் சாப்பாடு ஐட்டங்களை
பெயர் சொல்லி வைக்கிறார்கள். அதுபோல, ஒரு சின்ன மண்
டம்ளரில், மோரும் குடிக்க, குடிக்க ஊற்றிக் கொண்டே 
இருக்கிறார்கள். கம்பு ரொட்டி, தவா ரொட்டி, கிச்சடி சாவல் 
(அரிசி), சாதம், சுட்ட அப்பளம், ஆறு வகைப் பொரியல் என  
அனைத்தும் அன்லிமிடட் தான். கடைசியாக குலாப் ஜாமூன்
அல்லது கஸ்டர்ட் ( நமது விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது 
ஒன்று) என ஒரு இனிப்புடன் சாப்பாடு முடிவடைகிறது.
           நான் குஜராத்தி  தாலி ஆர்டர் செய்திருந்ததால், முதலில் 
அந்த ஊர் ஸ்பெஷலான ' டோக்ளா ' வைக்கப்பட்டது. 
பெரும்பாலான குஜராத்தி டிஷ்கள் இனிப்பாகவே இருந்தன. 
வெரைட்டியாக சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்
இது. ஆனால், என்ன விலை தான் கொஞ்சம் அதிகம். ஒரு 
முழுச் சாப்பாட்டின் விலை ரூ.250 /-
Related Posts with Thumbnails