மீண்டும்.....

வெள்ளி, பிப்ரவரி 20, 2015

             கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பூவிற்கு வந்திருக்கிறேன். இடையில் பல மாற்றங்கள்.... இட மாற்றங்கள்.
ஆனாலும் அவ்வப்போது பல பதிவர்களின் பக்கங்களை படித்துக் கொண்டுதான் இருந்தேன்.  சிலர் தொடர்ந்து நன்றாக எழுதிக் கொண்டு இருக்கின்றனர். பலர் முகப்புத்தகத்தின் ஈர்ப்பினால் அதில் எழுதி வருகின்றனர். சிலர் ஜி + ல் எழுதுகின்றனர். எழுத்து ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பலருடைய எழுத்துக்களை புத்தகங்களிலும் புத்தகங்களாகவும் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.
இனியாவது தொடர்ந்து ஏதேனும் உருப்படியாக எழுதலாம் என நினைக்கிறேன். உங்களின் ஆதரவோடு...

21-12-2012

வெள்ளி, டிசம்பர் 21, 2012

21-12-2012 இன்று உலகம் அழியப் போவதாக உலகமெல்லாம்
ஒரு பேச்சு. உண்மையில் இன்றைக்கு உலகம் அழியப்
போகிறதோ, என்னவோ தெரியலை. ஆனால் கிட்டத்தட்ட
ஒரு வருடத்திற்கு பிறகு, இன்றைக்கு ஒரு பதிவு எழுதலாம்னு
தோணுது .

எல்லாரும் மயன் காலண்டர் பற்றிப் பேசிக்கிட்டிருக்காங்க.
அதில் போட்டிருப்பது பற்றிய முழு விவரம் தெரியலை.

அப்படியே அழிஞ்சா, அழியறதுக்கு முன்னாடி இதைப் படிச்சு
முடிச்சிடுங்க.

உலகம் முழுவதும் அழியாம, ஒவ்வொரு பகுதியாக அழிந்து
கொண்டுதான் இருக்கிறது.சுனாமியாலும், நிலநடுக்கத்தாலும்
மேலும் பல இயற்கை சீற்றங்களாலும் அழிந்து கொண்டுதான்
இருக்கிறது. நம்முடைய அதீத அறிவியல் வளர்ச்சியால்
முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் புவிவெப்பமடைதல்
போன்ற இயற்கை அழிவுகளே அவற்றால் மிக அதிகம்.

காடுகளையும்,  மிக அரிதான காட்டு விலங்குகளையும்
அழிக்க முடிந்த நம்மால் கொசுக்களை அழிக்க முடியவில்லை.
அதனால் பெருகிவரும் நோய்களையும் கட்டுப்படுத்த
முடியவில்லை. தினமும் ஒரு புதிய நோய் உருவாகிக்
கொண்டுதான் இருக்கிறது.
அரசும், சமூக நல அமைப்புகளும் மரம் வளர்ப்பதைப் பற்றியும்
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத்  தடுக்கவும்  பல நடவடிக்கைகளைக் கூறினாலும் அவற்றில் செயல் வடிவமாகுவது மிகச்
சிலவைதான். குறைப்பதற்குதான் முயற்சி எடுத்துக்
கொண்டிருக்கிறோம். ஒழிப்பதற்கு  அல்ல.

இப்படி இயற்கை அழிவுகள் ஒருபுறம் இருந்தாலும் கொலை,
கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல் என தனி மனிதனால்
நடக்கும் அழிவுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதான்
போகிறது.

இதைப் பற்றி ஒரு கார்ட்டூன் இன்றைய தினமணியில்
வெளியாகியுள்ளது.



நன்றி: தினமணி

உண்மையில் இந்தப் படத்தில் உள்ளது போல  உலகத்தின்
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நாமே உலகத்தை
அழித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதைப் பற்றி நாசாவும் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச்
செய்தி:

2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிந்துவிடுவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி தான் என்றும், உலகம் அழிந்துவிடாது என்றும் நாசா அறிவித்துள்ளது.
2012 என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் 2012 டிசம்பர் 21ம் தேதி
உலகமே அழிந்து விடும் என்று தகவல்கள் பரவின. மாயன்
கேலண்டரில் 21ம் தேதிக்குப் பிறகு எந்த விவரமும் இல்லாததே
இந்த புரளி உருவாகக் காரணம். இதுமட்டுமல்லாமல், பூமியுடன்
வேறொரு கிரகம் மோதவிருப்பதாகவும், அதனால் பூமி அழியக்
கூடும் என்றும் தகவல்கள் இணையதளங்களில் உலா வந்தன.
ஆனால் இதனை நாசா ஆராய்ச்சி மையம் மறுத்துள்ளது.
இன்னும்  4 பில்லியன் ஆண்டுகள் பூமி எந்த ஆபத்தும் இன்றி
இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஓர் இலக்கிய மாலை

திங்கள், பிப்ரவரி 27, 2012

               

                   நேற்று டெல்லி தமிழ்ச் சங்கத்தில் திரு.எஸ்.
ராமகிருஷ்ணன் அவர்களின் உரை நிகழ்ச்சி இருந்தது. பொதுவாக
இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழ்ச்சங்கத்தில் மாலை 6 அல்லது
6 .30 மணிக்குத்தான் துவங்கும். அதனால் நானும் வழக்கம்
போல 6 .30 மணிக்குக் கிளம்பி போனால், நான் போய் சேர்ந்த 10
நிமிடங்களுக்கெல்லாம் எழுத்தாளர் பேசி முடித்துவிட்டார்.
அங்கு கேட்டால், நிகழ்ச்சி 5 மணிக்கே ஆரம்பித்து விட்டதாகவும்,
6 .30 மணிக்குமேல் திரைப்படம் ஒளிபரப்பப்படப் போகிறது
என்றும் சொன்னார்கள். கிளம்பி வந்து கேட்க முடியாமல்
போய்விட்டதே என்று மிகவும் கஷ்டமாகி விட்டது. இதில்
சந்தோசம் என்னவென்றால் சக பதிவர்களான திருமதி.
முத்துலெட்சுமியையும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களையும்
சந்திக்க முடிந்தது.


                  பல நாட்களாக சந்திக்க வேண்டுமென திட்டம் போட்டு,
 கடைசியில் சந்திக்க முடியாமல் போய்விட்டது. நேற்றுதான் அது சாத்தியமானது. அதுவும் நேற்று, பதிவர்கள் அனைவரும்
டெல்லியில் நடந்துகொண்டிருக்கும் உலகப் புத்தகக் கண்காட்சியில் சந்திக்கலாமா என்று திரு.வெங்கட் அவர்கள் கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கும் என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது.
கடைசியில் மாலையில் தமிழ்ச்சங்கத்தில் தான் அவர்களை
சந்திக்க முடிந்தது. அந்தமட்டில் சந்தோஷம். எழுத்தாளரின்
பேச்சைத்தான் முழுமையாகக் கேட்க முடியாமல் போய்விட்டது.
அவர் பேசி முடித்தபின் அவருடன் சேர்ந்து புகைப்படம்
எடுத்துக்கொண்டோம்.

                நேற்றைய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்
உரையை திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது வலைப்பூவில்
விரிவாக எழுதியுள்ளார்.


Related Posts with Thumbnails