பிறந்த நாள்...

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010


    

குழந்தைக்கு முதலாவது 
       பிறந்தநாளைக் 
             கொண்டாடுகிறார்கள்...
 உண்மையில் தாய்க்கும் இது,
       இரண்டாவதாகப் 
              பிறந்த, நாள்தானே!!!
 ஏன் அறியவில்லை 
            இதை எவரும்???
 எவருந்தான் அறியவில்லை, 
    நீயுமா உணரவில்லை???

                                      

டைபாய்டு

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

               போன பதிவில் என் குழந்தைக்கு நேர்ந்த 'Viral Diarrhoea' பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குப் பின்னர், குழந்தைக்குப் பத்துமாதம் இருக்கும் பொழுது, கடுமையான காய்ச்சல் வந்தது. அப்பொழுதும் ' All India Institute of Medical Sciences' (AIIMS)- க்குத் தூக்கிச்சென்றோம். அங்கு நிமோனியாக் காய்ச்சலாக இருக்கலாம் என்று எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப்பார்த்துக் கடைசியில் ' Viral Fever'  என்று அங்குள்ள டாக்டர்கள் கூறிவிட்டனர்.  பின் நாங்களும் வீட்டிற்கு அருகிலுள்ள டாக்டரிடம் காண்பித்து, குழந்தைக்கு Injection போட்டு, மருந்துகள் எல்லாம் கொடுத்து வந்தோம். ஆனால் ஒரு வாரமாகியும் காய்ச்சல் கொஞ்சம்கூடக் குறையவேயில்லை.



                அப்பொழுது, டெல்லியில் வெயில் வேறு, பகலில் 50டிகிரியும் இரவில் 39டிகிரியும் இருந்து வந்தது. இதனால் டாக்டர் இந்த க்ளைமேட்டினால்தான் Temperature குறையவில்லை என்றுகூறி, தமிழ்நாட்டிலுள்ள சொந்த ஊருக்குக் குழந்தையைத் தூக்கிச்செல்லுமாறு கூறினார். குழந்தைக்கு நன்கு குணமான பிறகும், டெல்லியில் வெயில் குறைந்த பிறகும் வருமாறு கூறினார்.

எனவே ஊருக்குக் குழந்தையைத் தூக்கிச்சென்று அங்குள்ள டாக்டரிடம் காண்பித்தோம். அங்கு சென்றும் 2 நாட்களாக Temperature குறையாததால், டாக்டர் Blood test, Urine test எடுத்துப் பார்த்து எல்லாம் நார்மல்தான் எனக்கூறி, தண்ணீரில் துணியை நனைத்து உடம்பை அடிக்கடித் துடைத்து விடச் சொன்னார். நடுராத்திரி கூட Temperature அதிகமாக இருந்தால், இவ்வாறு செய்யச்சொன்னார். அப்படித் துடைக்கும்போது குழந்தை கதறி அழும். பார்க்க ரொம்பக் கஷ்டமாக இருந்தது. பின்னர் அந்த டாக்டர் வேறு ஒரு  டாக்டரிடம் காண்பிக்கச் சொன்னார். இவ்வாறாக, ஒவ்வொருவராக 3  டாக்டர்கள் பார்த்துக் கடைசியில் 17 நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், குழந்தை Critical Situation-ல் இருக்கிறது; Temperature 103 டிகிரிக்குக் கீழ் குறையவே இல்லை; இன்னும் 1 டிகிரி அதிகமானால் கூட Fits வர வாய்ப்புள்ளது என்றுகூறி, உடம்பை Full Scan பண்ண வெண்டும் அந்த வசதி இந்த ஊரில் இல்லை, அருகிலுள்ள பெரிய ஊரில், ஒரு பெரிய ஹாஸ்பிட்டலுக்குப் போகுமாறு எழுதிக்கொடுத்தார்.

 அங்கு சென்றால், அங்கும் Blood test, Urine test மற்றும் Full Scan எல்லாம் எடுத்தார்கள். குழந்தைக்கு நரம்பு வெளியே தெரியாததால், Blood test எடுப்பதற்கும் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கும் குத்திக் குத்தி, பாவம்! அழுது, கதறவிட்டார்கள். பின்னர் அங்கு அட்மிட் பண்ணச்சொன்னார்கள். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் என எல்லா டெஸ்ட்டும் எடுத்துப்பார்த்து, 3 நாட்கள் கழித்து, 20வது நாள் ' டைபாய்டு' என உறுதிப்படுத்தினார்கள்.     
அதற்குள் குழந்தை, 20நாட்கள் தொடர்ந்து அடித்த காய்ச்சலால் சோர்ந்து, வெளிறிப் போய்விட்டது. அதன்பின் டைபாய்டுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, காய்ச்சல் முற்றிலுமாக விட்டது.2 நாட்கள் முழுவதுமாகக் காய்ச்சல் இல்லாமல் ஆன பின்புதான், 'டிஸ்சார்ஜ்' செய்தார்கள்.
               Chief டாக்டர், " குழந்தைக்குப் பொதுவாக டைபாய்டு வராது; அதுவும் 10மாதக் குழந்தைக்கு வாய்ப்பே இல்லை; 2 வயதில்தான் குழந்தைகளுக்கு டைபாய்டுக்கான தடுப்பூசியே போடப்படுகிறது. ஏனெனில், அதன்பின்தான் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்; இப்பொழுது 10 மாதக் குழந்தைக்கு வந்திருக்கிறதென்றால், மிக ஆச்சரியமாக உள்ளது. இது தண்ணீரால்தான் பரவியிருக்கிறது" என்று கூறினார். திரும்பவும் டைபாய்டு வராமலிருக்க, 10 மாதத்திலேயே தடுப்பூசி குழந்தைக்குப் போடப்பட்டது. அதன்பின்தான் முழுவதுமாகக் குணமாகியது.
              எனக்கு என்ன ஆதங்கம் என்றால், இதை 20 நாட்களாக கண்டுபிடிக்காமல் விட்டதுதான். டெல்லியில் ஒரு 10 மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து 10 நாட்களாகக் காய்ச்சல் இருந்தும், எந்த டாக்டரும் ஒரு Blood test கூட எடுக்கச் சொல்லவில்லை . ஊருக்கு வந்து, தொடர்ந்து 20 நாட்களாகக் காய்ச்சல் இருக்கிறது என Blood test எடுத்தும் டைபாய்டுதான் என எந்த டாக்டராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . 10 மாதக் குழந்தைக்கு வராது என்பதால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார்கள். ஆனால் 20 நாட்களாக குழந்தைப் பட்ட அவஸ்தையை சொல்லிமுடியாது. குழந்தையையும், குழந்தைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும் எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தும், கொதிக்க வைத்தத் தண்ணீரையே ஃப்ளாஸ்கில் ஊற்றிப் பயன்படுத்தியும், Viral Diarrhoeaவாலும் டைபாய்டாலும் குழந்தை ஒரு வயதிற்குள் 2முறை பாதிக்கப்பட்டது மிகப் பெரிய கொடுமை! 

எனது குழந்தையின் வயிற்றுப்போக்கு...

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

               எனது குழந்தைக்கு எட்டு மாதமாக  இருக்கும்பொழுது ஒருநாள் திடீரென்று வாந்தியும், பின் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. உடனே வீட்டிற்கு அருகிலுள்ள டாக்டரிடம் காண்பித்தோம். மருந்துகள் கொடுத்தும் இரவெல்லாம் வயிற்றுவலியால் துடித்து அழுதது. வயிற்றுப்போக்கும் நிற்கவில்லை. ஏழாவது மாதத்திலிருந்தே இட்லி,பருப்பு சாதம் மற்றும் பவுடர் பாலும் பாக்கெட் பாலும் கொடுத்து வந்தேன். ஆனால் அன்று பவுடர் பாலோ, பாக்கெட் பாலோ எது கொடுத்தாலும் பால் திரிந்த மாதிரி 'motion' போக ஆரம்பித்துவிட்டது.
              டெல்லியில் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள கிளினிக்குகளில் எல்லாம் மாலை 6 to 9 மட்டுமே டாக்டர்களின் பார்க்கும் நேரம். இதனால் நடுஇரவில் குழந்தை அழுதவுடன் All India Institute of Medical Sciences (AIIMS) -க்குத் தூக்கிச் சென்றோம். அங்கு அவசரப் பிரிவில் உள்ள டாக்டர் பரிசோதித்துவிட்டு, குழந்தைக்கு 'Viral Diarrhoea ' என்று கூறினார். "இது எந்த மருந்து கொடுத்தாலும் உடனே நிற்காது; ஐந்து நாட்கள் வரை இருக்கும்; அதன்பின்தான் குணமாகும்" என்றார். குழந்தைக்குப் பவுடர் பாலோ, பாகெட் பாலோ எதுவும் கொடுக்கக் கூடாது என்று கூறிவிட்டார். இட்லி, சாதம் என்று எதுவும் குழந்தை சாப்பிட மறுத்துவிட்டதால் என்ன கொடுப்பதென்றே தெரியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டேன். ஊருக்கு ஃபோன் செய்து கேட்டால் 'ஆரோ ரூட் மாவு' அல்லது ஜவ்வரிசியை வறுத்துப் பொடி பண்ணிக் கஞ்சியாகக் கொடுக்கச் சொன்னார்கள். இங்கு ஆரோ ரூட் மாவு கிடைக்காததால் ஜவ்வரிசிக் கஞ்சி, சத்துமாவுக் கஞ்சி இவற்றைத்தான் மாற்றி, மாற்றிக் கொடுத்து வந்தேன். Dehydrate ஆகி விடாமல் இருக்க டாக்டர் 'Pedialite ' கொடுக்கச் சொன்னார். இரவெல்லாம் வயிற்றுவலியால் தூங்காமல் துடித்துப் பின், நிறைய antibiotics , தினமும் ஒரு ஊசி என நான்கு injection போட்ட பிறகு ஐந்து நாட்கள் கழித்துதான் குணமாகியது. ஒரு வாரமாக பாவம் குழந்தை படாதபாடு பட்டுவிட்டது.



 
               
                  பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாட்டிற்கு சொந்த ஊருக்குப் போன போது, அங்கும் இதே போல ஒருநாள், பால் திரிந்தது போல வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அங்குள்ள டாக்டரிடம் தூக்கிச்சென்றோம். அவர் எந்த மருந்தும் கொடுக்கவில்லை. முதலில் Nestle - யின் Nestum -stage 1 (Rice flavour ) சிறிது உப்பு போட்டுக் குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னார். பாலோ, மற்ற எந்த உணவோ கொடுக்க முடியாத நிலையில், Nestum -மையே பாலுக்குப் பதிலாகக் கொஞ்சம் தண்ணியாக கஞ்சிபோல கொடுக்கச் சொன்னார். என்ன ஆச்சர்யம்! அவ்வாறு இரண்டு முறைக் கொடுத்ததும் ஒரே நாளில் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. இதேபோல அப்பொழுதும் கொடுத்திருந்தால் ஒருவேளை ஒரே நாளில் நின்றிருக்குமோ, என்னவோ? அங்கு இதுபோல் எந்த டாக்டரும் சொல்லவில்லை. குழந்தையும் பாவம் ஒருவாரம் கஷ்டப்பட்டிருக்காது; நாங்களும் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம். இதை நான் அனுபவத்தில் கண்டதால், கைகுழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எழுதுகிறேன்.                 
Related Posts with Thumbnails