ராஜபாளையம்...

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

              எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பக்கத்தில் 
இருக்கும் ஊர் இந்த ராஜபாளையம். இது மதுரையிலிருந்து 
85 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊருக்குள் நுழையும் 
பொழுதே "நாய்களின் நகரம்" உங்களை வரவேற்கிறது 
என்றுதான் போர்டு வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு 
ராஜபாளையத்து நாய்கள் மிகவும் புகழ் பெற்றவை. 
 

 
              பல வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவிலிருந்து 
'ராஜூக்கள்' என்னும் சமூகத்தினர் இங்கு புலம்பெயர்ந்து 
ஆட்சிபுரிந்ததால் ராஜாக்களின் கோட்டை அதாவது 
"ராஜபாளையம்" என்று அழைக்கப்படுவதாக 
படித்திருக்கிறேன். மேலும் இங்கு சஞ்சீவி மலை என்ற ஒரு
மலை உள்ளது. இது லக்ஷ்மனனுக்காக, அனுமன் எடுத்து 
வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்கிறார்கள். 


            ராஜபாளையத்திற்கு அருகில் அய்யனார்கோவில் என்ற 
ஒரு இடம் உள்ளது. இது மேற்குத்தொடர்ச்சி மலையின் 
அடிவாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதி. இங்கு அருவியும், பல 
அரிய வகை மூலிகைகளும், உயிரினங்களும் உள்ளன. இது 
பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடம். ராஜபாளையத்தைச் சுற்றி 
பல காட்டன் மில்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலோர்  
வேலை பார்ப்பது இந்த ஆலைகளில்தான்.



இந்த ராஜபாளையத்தைப் பற்றி சமீபத்தில் படித்த கட்டுரை :
சரித்திரங்களின் சங்கமம் ராஜபாளையம் :- 

             ' தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை
அழித்திடுவோம்...' என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரான
முண்டாசுக் கவிஞர் பாரதியார், ஒருமுறை பாழடைந்த தனது
வீட்டை சீரமைக்க எண்ணி, மனைவி செல்லம்மாள் 
வற்புறுத்தலால், ராஜபாளையம் ஜமீன்தாரை பார்க்க வந்தார்.
அவர் ஊரில் இல்லாததால், பசியும், களைப்புமாய்
ராஜபாளையத்தில் எழுதிய அனல் வரிகள்தான் இவை. கி.பி.15 
ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரின் தலைமுறையைச் 
சேர்ந்த சின்னராஜா இங்கு கோட்டை கட்டி ராஜ்ஜியம் 
செய்ததால், இந்த ஊரின் பெயர் ராஜபாளையமாயிற்று. 
பாளையம் என்றால் கோட்டை என்று பொருள். 
ஆரம்பத்தில் கீழராஜகுலராமன் என்ற பகுதியில் தங்கி நகரை
விரிவுபடுத்தினர். பின், கி.பி. 1483 ல் ராஜபாளையத்தில் உள்ள
சஞ்சீவி மலையில் இருப்பிடத்தை மாற்றினர்.
               விஜயநகரத்தில் நடந்த கள்ளிக்கோட்டை போரால் 
மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதனால் 
அங்கிருந்து ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையத்தில் 
குடியேறினர். இதன் அடையாளமாக தற்போதும் 
சமுதாயசாவடி இருக்கிறது. இங்கு கி.பி.12 ம் 
நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னர்களால்
விரிவு படுத்தப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோவில் 
உள்ளது. மதுரையை ஆண்ட முதலாம் ஜடாவர்ம
குலசேகரபாண்டியன் இக்கோயிலின் பராமரிப்பு 
செலவுகளுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார்.
இவ்விபரங்கள் கோயில் கர்ப்பகிரகத்தில் கல்வெட்டுகளாக
பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் தாமரைக்கண்ணன் என்பவர்,
தினமும் எண்ணெய் விளக்கேற்றும்  செலவுக்காக, தனது
ஆஸ்தியை வழங்கிய விவரமும் கல்வெட்டில் உள்ளது.
 முகமண்டபத்தின் தூண்கள் கிருஷ்ணமாராஜா மற்றும்
சோழராஜா என்பவர்களால் உருவாக்கப்பட்டன.

                மதுரை ரோட்டில் வடுக ஊரணி என்னும் ஊரணி
உள்ளது. பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக
கருதப்படும் இந்த ஊரணி சமீபத்தில் தூர்
வாரப்பட்டிருக்கிறது. அப்போது சிவலிங்கம், நந்திகள்
உட்பட பல சிலைகள் கிடைத்துள்ளன.





              மேலும் 600 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று
இன்றும் ராஜபாளையத்தில் இருக்கிறது. இதன் பெயர்
"ஆப்பிரிக்கன் போபாப்". ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே
காணப்படும் இந்த மரம், அதிக வயதுடைய மரங்களில்
ஒன்று. பிற்கால பாண்டிய மன்னர்கள் தங்களது  கடல்
பயணத்தின் மூலம் இதைக் கொண்டு வந்திருக்கலாம்
எனக் கூறப்படுகிறது.


 
                சுதந்திரப் போராட்டக் காலத்தில், வீரர்கள் நமது
தேசியக் கொடியை சஞ்சீவி மலையின் உச்சியில் பறக்க
விட்டு புரட்சி செய்தனர். இவ்வாறு திரும்பும் இடமெல்லாம்
வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் ராஜபாளையம்,
சரித்திரங்களின் சங்கமமாக உள்ளது.

 




   

21 comments:

Chitra சொன்னது…

ராஜபாளைய பெருமைகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதை போல வரலாற்று சிறப்பம்சங்கள் கொண்ட மற்ற ஊர்களை பற்றியும் நீங்கள் தொடர்ந்து எழுதலாமே.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு. தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நான் ராஜபாளையம் போகும் போது சஞ்சீவி மலை பற்றி விபரங்கள் சேகரித்து எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டே செல்வேன். நீங்கள் எழுதி விட்டீர்கள்.
ராஜபாளையத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
நன்றி அம்மா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ராஜபாளையம் என்றாலே நாய் மட்டுமே என்று நினைக்கும் பலரின் எண்ணத்தினை மாற்றும்படியான பகிர்வு. நன்றி ஜிஜி!

நேசமித்ரன் சொன்னது…

நன்றி ஜிஜி,நல்ல பதிவு

goma சொன்னது…

வரலாற்றுப் பெருமை வாய்ந்த ராஜபாளையத்தில் நாங்கள் இரண்டு ஆண்டுகள் வசித்திருக்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தினமும் சஞ்சீவி மலை தரிசனம் கிட்டும் வண்ணம் ,பி.எஸ்.கே நகரில் வீடு ,அந்த இரண்டு வருட சஞ்சிவி மலை த்ரிசனம்தான் நான் இன்றுவரை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

விருந்தோம்பலுக்கும் எளிமைக்கும், ராஜபாளையம் ராஜூக்கள் பெயர் பெற்றவர்கள்.

stella சொன்னது…

rajapalayathila ethana news eruka super

Unknown சொன்னது…

வாங்க சித்ரா,
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.
இன்னும் சில ஊர்களைப் பற்றி எழுத வேண்டும்.அதற்கான விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.சீக்கிரம் எழுதறேங்க.

Unknown சொன்னது…

வாங்க கோவை2தில்லி,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ரத்னவேல் ஐயா ,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்,
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க நேசமித்ரன்,
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க கோமா,
பி.எஸ்.கே நகர் எனக்கு நன்கு தெரியும்.அங்கு எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
ஆமாங்க.நீங்கள் சொல்வது போல,அந்த சமூகத்தை சேர்ந்த என்னுடைய தோழிகள் பலரின் விருந்தோம்பலைப் பார்த்திருக்கிறேன்.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க ஸ்டெல்லா,
அடிக்கடி வலைப்பக்கத்துக்கு வாங்க.
வருகைக்கு நன்றி.

மாதேவி சொன்னது…

ராஜபாளையம் வரலாறு அறிந்து கொண்டேன்.

Unknown சொன்னது…

ஊர்பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி! படங்கள் சூப்பர்! நேரில் பார்க்க வேண்டும் போலுள்ளது! குறிப்பாக அந்த மரம், அருவி!

Padhu Sankar சொன்னது…

Nice to know about Rajapalayam .Dogs look cute

Unknown சொன்னது…

வாங்க மாதேவி,
வருகைக்கு நன்றிங்க.

RVS சொன்னது…

ராஜபாளையம் நாய்கள் பற்றி நல்லா எழுதியிருக்கீங்க. ;-))

Unknown சொன்னது…

வாங்க RVS,
வருகைக்கு நன்றிங்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பதிவு ! நான் மூன்று வருடம் P.A.C.R-ல் படித்தேன் !

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails