காலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )

புதன், அக்டோபர் 20, 2010


பத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா?
புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள்.

ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா?
இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமை தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் தாயைக் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் அருமை தெரிய வேண்டுமா?
வாராந்திர பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

ஒரு மணியின் அருமை தெரிய வேண்டுமா?
காத்திருக்கும் காதலர்களைக் கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
விமானம், ரயில் அல்லது பஸ்ஸை தவற விட்டவர்களைக் கேளுங்கள்.

ஒரு நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

ஒரு மில்லி-நொடியின் அருமை தெரிய வேண்டுமா?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

காலம் பொன்னானது.
ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகப் போற்றுங்கள்.
வெற்றிச் சிகரத்தில் கொடி நாட்டலாம்.

27 comments:

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பொன்னான வாசகங்கள்!

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா.

Asiya Omar சொன்னது…

நல்லாயிருக்கு.அருமை.

goma சொன்னது…

இதையெல்லாம் கேட்க்காமல்தான் நம்மில் நிறைய பேர் நம் பொன்னான நேரத்தை வீணாக்குகிறோம்.....

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக மிக நல்ல பகிர்வு.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

பொன்னே தாங்க.. நேரம் சரியா செலவிடாம என் பொன் ஒன்னு காணாப்போயிடுச்சு..
நல்ல விசயம் பகிர்ந்திருக்கீங்க..

பொன் போன்ற என் கமெண்ட்டை அனுப்பிட்டேன்.:)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

காலம் பொன் போன்றது உண்மைதான்...

Chitra சொன்னது…

ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் வாசித்து இருக்கிறேன். அருமையான தமிழ் ஆக்க பகிர்வுக்கு நன்றிங்க.

சௌந்தர் சொன்னது…

காலம் பொன்னானது.
ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகப் போற்றுங்கள்.////

உண்மை உண்மை தான் ஒரு நொடியில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் காலம் பொன் போன்றது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படித்ததில் பிடித்தது.... எங்களுக்கும் தான். இதோ எனது பொன்னான ஓட்டு மற்றும் கருத்து :)

வெங்கட் நாகராஜ்

Unknown சொன்னது…

வாங்க..
தங்கள் வருகைக்கு நன்றி.
ஆசியா
கோமா
ராமலக்ஷ்மி

Unknown சொன்னது…

//பொன் போன்ற என் கமெண்ட்டை
அனுப்பிட்டேன்.:) //

கமெண்ட்டுக்கு நன்றிங்க முத்துலெட்சுமி.

Unknown சொன்னது…

வாங்க..சங்கவி,
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க..சித்ரா.
கருத்துக்கு நன்றி

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி சௌந்தர்.

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

stella சொன்னது…

supera eruku

விக்னேஷ்வரி சொன்னது…

அழகா சொன்னீங்க.

Unknown சொன்னது…

நன்றி ஸ்டெல்லா .

Unknown சொன்னது…

வாங்க..விக்னேஷ்வரி.
வருகைக்கு நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

‘ காலம் பொன் போன்றது’ என்பதை பொன்னெழுத்தில் பொறித்த மாதிரி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!!

Jaleela Kamal சொன்னது…

காலம் பொன் போன்றது , மிக அருமை அருமை.

Aathira mullai சொன்னது…

அருமையா சொல்லி இருக்கீங்க.. இது வைரமுத்து சொன்னது இல்லையா? .... மேலும் கொஞ்சம் உங்க கருத்தைச் சேர்த்து இருக்கிறீர்கள்.. நல்லா இருக்கு..பாராட்டுக்கள்..

தேவன் மாயம் சொன்னது…

‘ காலம் பொன் போன்றது அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

Unknown சொன்னது…

வாங்க மனோ சாமிநாதன், ஜலீலா .
வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி
ஆதிரா
தேவன் மாயம்

kaleel ahamed சொன்னது…

kaalathin meethu sattiyamaga manithan nastathil irukiram endru quran kuurukirathu

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails