வாழை இலை விருந்து...

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

            
              வாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம்
போன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம்.
வாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது.
அந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை
மரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை
இலையிலதான் சாப்பிடுவாங்க. வாழை இலையில சாப்பிட்டா
கண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு
இலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை
இலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச்
சாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும்
முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே
வாழை இலைதான்! ஆனால் இப்போ நம்ம ஊர்களிலயே
ஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப்
போனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.



                எங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி
ஒரு கதை சொல்லியிருக்காங்க. " ஒரு முறை பரத்வாஜ
முனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப்
பிரதிபலன் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில்
சாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி,
வாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன்
இலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால்
போட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில்
மனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும்,
எதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும்  காய்கறிகளும்
பரிமாறப்படுவதற்கு இதுதான் காரணமாம்.


               " அதேபோல, வாழை இலையில எப்படி உணவு
பரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. " இலையின்
நுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி
வலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக
சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்
இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு,
காய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும்
பரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர்
இலைதான் நல்லது. இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக
இருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான
சூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய்
விடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும்.
உணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு
உள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும்.
கடைசியா ருசிக்குப் பாயசம்" இப்படி ஒரு முறையே இருக்கு.


                ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை
இலை பெரிதும் பயன்படுது. "அல்சர், குடல் நோய்கள் வராமல்
தடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து
சாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில்
இருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு
நிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை
மரத்தில் பதினெட்டு வகைகள் இருக்கு. அவை
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள்
உண்டாம்". வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு
வருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற,
வாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய
பாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர
வாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக
அழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு
சருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும்
பயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்
பயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி
இருக்குறதில்லை.

              இவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை,
இன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள்,
10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன
பொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில,
என் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு
இலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார். அதுவும் ஐந்து
ரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு
இலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு
விற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு? என்னைக்காவது
இலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது.
டெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில்
இருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு
ஆசையே பட முடியாது போல!

29 comments:

எல் கே சொன்னது…

அற்புதமான தகவல்கள். அப்புறம் இந்த பரிமாறும் விதம் ஊருக்கு ஊர் மாறுபடும். அதை பற்றி பிறகு என் தாயிடம் கேட்டு சரியாய் சொல்லறேன்

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

கதையும், பரிமாறும் முறை பற்றிய விளக்கமும் நன்று.

RVS சொன்னது…

தலைவாழை இலை போடும் விருந்துகளில் எங்க சைடுல நுனி வலது அடி இடது.
பரத்வாஜர் மேட்டர் புதுசு.. மேல் பக்கத்துல வானரங்கள் சாப்பிடும்..... தெரியலை.....
இப்போல்லாம் எஃப்.எம் ல பேப்பர் வாழை இலை அப்படின்னு விளம்பரம் போடறாங்க...
நல்லா பெரிய இலை சென்னையிலும் அஞ்சு ரூபா தான். கொஞ்சம் சின்னதுன்னா மூணு ரூபாயிக்கு கிடைக்கும்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

புதிய விஷயங்கள் – பரத்வாஜர் சொன்னது. தில்லியில் ஏதோ விசேஷம்னா தான் வாழையிலை கிடைக்கும், மற்ற நாட்களில் வேண்டும் என்றால், கரோல்பாக் போல சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். வாழையிலையில் சாப்பிடும்போது உணவுக்கும் ஒரு நல்ல சுவை கிடைக்கிறது உண்மை. பகிர்வுக்கு நன்றி.

எல் கே சொன்னது…

//தலைவாழை இலை போடும் விருந்துகளில் எங்க சைடுல நுனி வலது அடி இடது.//
அண்ணாச்சி அதன் சொல்லி இருக்கேன் பாரும். ஒவ்வொரு ஊருக்கும் மாறும். பரிமாறும் முறையும் மாறும். முதலில் என்ன உணவு பரிமாறனும் அடுத்து என்ன பரிமாரனும்னு ஒரு விதியே இருக்கு ஒவ்வொரு ஊருக்கும்

சௌந்தர் சொன்னது…

வாழை இலை பற்றி நல்ல தகவல் இப்போது எல்லாம் வாழை இலை மாதிரியே பேப்பர் தான் போடுறாங்க

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வணக்கம்...

வாழை இலைப்பற்றி பல புதிய தகவல்கள்...

நானும் வாழை பற்றி ஒரு பதிவு போட்டு உள்ளேன் நேரம் இருக்கும் போது பாருங்கள்...

http://sangkavi.blogspot.com/2010/01/blog-post_05.html

மாதேவி சொன்னது…

நல்ல இடுகை.

வாழையின் பயன்கள் பற்றி பதிவு ஒன்று முன்பு நானும் பதிந்திருந்தேன்.வாழையடி வாழை :)))

a சொன்னது…

சிறு வயதில் கல்யாண வீடுகளில் இலை போடும்போது இடம் / வலம் மாற்றி போட்டு திட்டு வாங்கியதுண்டு......

stella சொன்னது…

payanula kuripukal super GG

Unknown சொன்னது…

வாங்க LK. ரொம்ப நன்றிங்க.உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லுங்க

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நல்ல விசயங்கள் அதும் அந்த குறைவா சாப்பிட ஐட்டம் சின்ன பகுதியில் ன்னா எதோ உணவு பிரமிடு போல இருக்குல்ல..

நுனி மாற்றி போடும் பழக்கம் சில இடங்களீல் இருக்குங்கறது புது தகவல் எனக்கு..

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி ஆசியா

Unknown சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி. வருகைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க RVS .
எனக்கு உங்க தகவல் புதுசா இருக்கு..
இலையை தப்பா போட்டால் எங்க தாத்தாகிட்ட
பயங்கர திட்டு விழும்.

Unknown சொன்னது…

@ LK
//ஒவ்வொரு ஊருக்கும் மாறும். பரிமாறும் முறையும் மாறும். முதலில் என்ன உணவு பரிமாறனும் அடுத்து என்ன பரிமாரனும்னு ஒரு விதியே இருக்கு ஒவ்வொரு ஊருக்கும் //

பரிமாறும் முறை பத்தி கேள்விபட்டிருக்கேன். ஆனால் இலையை
மாத்தி போடறது இப்போ தான் கேள்விபடறேன்.தகவலுக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க வெங்கட் நாகராஜ்.தகவலுக்கு நன்றி.

Unknown சொன்னது…

நன்றி சௌந்தர்.

Unknown சொன்னது…

வாங்க சங்கவி,
வாங்க மாதேவி
வருகைக்கு நன்றி.
கண்டிப்பா உங்க பதிவை பார்க்கறேன்.

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்.

Unknown சொன்னது…

நன்றி ஸ்டெல்லா .

Unknown சொன்னது…

//நுனி மாற்றி போடும் பழக்கம் சில இடங்களீல் இருக்குங்கறது புது தகவல் எனக்கு.. //

ஆமாங்க முத்துலெட்சுமி.எனக்கும் புதுசாதான் இருக்கு.
வருகைக்கு நன்றி.

Vidhya Chandrasekaran சொன்னது…

நல்ல தகவல்கள்..

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி வித்யா.

ஹுஸைனம்மா சொன்னது…

முன்னல்லாம், வீட்டுலயே வாழையிலை வெட்டி விருந்து வைப்பதுண்டு. இப்பக் கடையிலயும் டிமாண்டா!!

erodethangadurai சொன்னது…

நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

வாங்க ஹுஸைனம்மா ,
ஈரோடு தங்கதுரை

ரொம்ப நன்றிங்க..

vimalanperali சொன்னது…

நல்ல தகவல்கள் நன்றி.வழை இலையில் வலது கைப் பக்கம் அகலமாக வரும் பக்கத்தை வைத்தால் கையால் பிசைந்து சாப்பிடவும்.சாப்பாடு கீழே சிந்தி விடாம இருக்கவும்தான் அப்படி ஒரு ஏற்பாடு.இம்மாதிரியான அறிவியல் பூர்வமான் ஏற்பாடுகளை சாஸ்திரமாகச் சொன்னால் புறந்தள்ல மாட்டார்கள் எனதான் அப்படிச் சொல்கிறார்கள்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails