முகோபத்தியாயா- நமக்குத் தெரியாத உண்மை

சனி, அக்டோபர் 30, 2010

             இது ஒரு பத்திரிக்கையில் நான் படித்த செய்தி.
டெஸ்ட் டியூப் குழந்தைகளின் தந்தையான ராபர்ட்
எட்வர்ட்டுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை
அறிவித்து இருக்கிறார்கள். குழந்தை இல்லை என்ற
காரணத்துக்காக கண்ணீர்விட்டுஅழுத... லட்சக்கணக்கான
தம்பதியினரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின்
முகத்தில் புன்னகையைப் பூக்க வைத்த விஞ்ஞானி
ராபர்ட் எட்வர்ட்டின் வயது 85.


             1978-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, இங்கிலாந்தில் பிறந்த
லூயிஸ் பிரவுன் தான் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை.
இன்று வரை உலகம் முழுதும் 43லட்சம் டெஸ்ட் டியூப்
குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். லேப்ரோஸ்கோப்பி
முறையில் பெண்ணின் சினைப்பையில் இருந்து எடுத்த
முட்டையையும், ஆணிடம் இருந்து பெற்ற விந்துவையும் ஒரு
டெஸ்ட் ட்யூப்பில் செலுத்தி, அவை இரண்டும் செயற்கை
முறையில் கருவாக உருவெடுக்கும் வரை காத்திருந்து, இந்தக்
கருவை மீண்டும் ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி,
பெண்ணை கர்ப்பமுறச்செய்யும் இந்த முறையின் தந்தை..
ராபர்ட் எட்வர்ட். லூயிஸ் பிரவுன் என்ற அந்த டெஸ்ட் டியூப்
குழந்தை, இன்று 32 வயது பெண்ணாக வளர்ந்து, இயற்கை
முறையிலேயே ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள். 32
ஆண்டுகள் கழித்து ராபர்ட்எட்வர்ட்டுக்கு இந்த
ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 
           "உயிர்களைப் படைக்கும் ஆற்றல்பெற்றவர்  கடவுள்
ஒருவரே. அவருடைய படைக்கும் தொழிலை விஞ்ஞானிகள்
என்ற பெயரில் மனிதர்கள் செய்வதை அனுமதிக்க முடியாது!"
என்று மதங்களும், சமூகமும், அரசாங்கமும் ஆரம்பக்
கட்டத்தில் அவருக்கு அடுக்கடுக்காக முட்டுக்கட்டைகளைப்
போட்டன. ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி,
"குழந்தை இல்லாத தம்பதிகளின் நிலைமை பரிதாபமானது.
டெஸ்ட் டியூப் முறையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள
அவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு!". என்று வாதாடி,
அதற்கான வாய்ப்பினை விஞ்ஞானத்தின் துணைகொண்டு
நிரூபித்தார். ராபர்ட் எட்வர்ட்டின் கண்டுபிடிப்பு மனிதகுலம்
முழுமைக்கும் பயன்படும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு
என்றாலும், இங்கிலாந்து அரசாங்கம் அவரது சாதனைகளை
இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை.
கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தலைமை இடமான
வாட்டிகனோ, ராபர்ட் எட்வர்ட் நோபல் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, கமிட்டிக்குக் கடுமையான
கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறது.



             இது ஒருபுறம் இருக்க, ராபர்ட் எட்வர்ட் போலவே
நமது நாட்டிலும் ஒரு விஞ்ஞானி இருந்தார். இவரும் அந்தக்
காலத்தில் டெஸ்ட் டியூப் குழந்தை பற்றிய ஆராய்ச்சியில்
தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர் பெயர் முகோபத்தியாயா.
இவரது முயற்சியின் வாயிலாக, ராபர்ட் உருவாக்கிய அதே
1978-ம் ஆண்டு கடும் நெருக்கடிகளுக்கு இடையில்,
எந்தவிதமான வசதிகளும் இல்லாத ஆராய்ச்சிக்கூடத்தில்
துர்கா என்ற டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கினார்.

             இந்தியாவில் 100-க்கு 10 தம்பதிகள் குழந்தை இல்லாத
தம்பதிகள் என்கிறது புள்ளி விவரம். குழந்தைச்செல்வம்
இல்லாவிட்டால் ஒரு பெண்ணை 'மலடி' என்று தொடங்கி..
வாய்க்கு வந்தபடி அவதூறு சொல்லும் இந்த சமூகம்
இப்படிப்பட்ட பெண்களுக்குக் குழந்தைப்பேறு ஏற்பட வழி
சொன்னார் என்பதற்காக, அப்போது முகோபத்தியாயாவை
யாரும் பாராட்டவில்லை. கைதட்டி உற்சாகப்படுத்தப்பட
வேண்டியவரைக் கொடூரக் குற்றவாளியாக சித்தரித்தது
அப்போது ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசு. இந்த
அவமானங்களைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை
செய்துகொண்டார். 'உலகம் தட்டையானது இல்லை...
உருண்டை வடிவிலானது' என்று சொன்னதற்காக
கலிலியோவைக் கல்லால் அடித்த இந்த உலகம் ஒரு நல்ல
விஞ்ஞானியைத் தனது அறியாமையால் இழந்துவிட்டது;
இந்த உண்மை இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டும்
விட்டது.

20 comments:

எல் கே சொன்னது…

என்னக் கொடுமை இது ஜிஜி ??

தகவலுக்கு நன்றி

Unknown சொன்னது…

வாங்க LK .
முதல் வருகைக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அடக்கொடுமையே.. நிஜம்தானா :(

ராமலக்ஷ்மி சொன்னது…

அறியாத தகவல். அதிர்ச்சி அளிக்கிறது.

Chitra சொன்னது…

அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

RVS சொன்னது…

நல்ல தகவல். பைத்தியக்கார உலகம். என்ன செய்வது?

ஹுஸைனம்மா சொன்னது…

ஆமா, நானும் படிச்சேன்.. கம்யூனிஸ்ட் அரசுதான் இதற்குக் காரணம் என்பது புது தகவல்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கொடுமை! எத்தனை குரூரம் இந்த அரசியல்வாதிகளில். :(((

Unknown சொன்னது…

//அடக்கொடுமையே.. நிஜம்தானா :( //

ஆமாங்க..நிஜம்தாங்க. இப்படியும் நடக்குது நம்ம நாட்டுல.
வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி.

Unknown சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி.
வருகைக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

வாங்க சித்ரா.
கமெண்ட்டுக்கு நன்றி.

Unknown சொன்னது…

வாங்க RVS.
ரொம்ப நன்றிங்க.

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

stella சொன்னது…

unmayilae ethu theriyatha unmai nala payanula thagaval

நேசமித்ரன் சொன்னது…

ம்ம்

அக்கறையுள்ள பதிவு

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி ஸ்டெல்லா.

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிங்க நேசமித்ரன்.

பட்டிக்காட்டான் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பட்டிக்காட்டான் சொன்னது…

இதையும் படிச்சு பாருங்க

நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
http://mittaikkadai.blogspot.com/2010/10/blog-post.html

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails